தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! - Jammu Kashmir encounter

ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் இரு பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டு கொல்லப்பட்டனர்.

J-K's Budgam
J-K's Budgam

By

Published : Oct 28, 2020, 7:43 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பத்காம் மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையினர் மற்றும் பாதுகாப்பப் படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரிபாக் மோச்வா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்தது தெரிவந்தது. அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டு கொல்லப்பட்டனர்.

தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டதாகக் கூறிய காவல்துறையினர், அவர்களிடம் இருந்த துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், வெடிப்பொருள்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

ஜம்மு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் பயங்கரவாத தடுப்பு செயல்களை பாதுகாப்பு படை தீவிரமாக மேற்கொண்டுவருகிறது. அங்கு சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்குப் பின் பயங்கரவாத செயலில் களமிறங்குவோர் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க:பிகாரை வெல்லப்போவது யாரு? நிதிஷின் பொருளாதார சாதனைகள் என்னென்ன?

ABOUT THE AUTHOR

...view details