கடும் மூடுபனி காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில், பெங்களூரு விமான நிலைய பயணிகள் மூடுபனி காரணமாக பலமுறை தங்களின் பயணங்களை தள்ளி வைத்துள்ளனர். அவர்களுக்கு நற்செய்தியாக, குறைந்த மூடுபனியிலும் விமானத்தை இயக்குவதற்கான அனுமதி பெங்களூரு விமான நிலையத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், CAT-IIIB தரத்திற்கு உயர்த்தப் பட்டுள்ளது. இதன் மூலம், குறைந்த மூடுபனியிலும் அங்கு விமானங்களை இயக்கலாம். இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "CAT-IIIB தரத்திற்கு உயர்த்தப்பட்ட தென்னிந்தியாவில் முதல் விமான நிலையம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையமாகும்.