தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிநாட்டு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை - கோவிட்-19 பெருந்தொற்று

டெல்லி: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

S Jaishankar  Global economy  COVID-19 pandemic  Travel  Coronavirus  வெளிநாட்டு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை  கரோனா பாதிப்பு  கோவிட்-19 பெருந்தொற்று  ஜெய்சங்கர்
S Jaishankar Global economy COVID-19 pandemic Travel Coronavirus வெளிநாட்டு அமைச்சர்களுடன் ஜெய்சங்கர் ஆலோசனை கரோனா பாதிப்பு கோவிட்-19 பெருந்தொற்று ஜெய்சங்கர்

By

Published : May 12, 2020, 9:49 AM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக்கு பிந்தைய உலகின் பிரச்னைகள் குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேசில், ஜப்பான், இஸ்ரேல் மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த வெளியுறவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “புதிய கரோனா வைரஸ் தொற்றுநோய், உலக சுகாதார மேலாண்மை மற்றும் அதன் பின்னர் பொருளாதார மீட்சி பற்றி ஜெய்சங்கர் பேசினார்” என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், “ஜெய்சங்கர், பயண விதிமுறைகள் உள்ளிட்ட பிரச்னைகளில் கவனம் செலுத்தினார்” என்று ட்வீட் தகவல் வழியாக அறிய முடிகிறது.

தொற்றுநோயின் கடுமையான பரவல் மற்றும் உலகளாவிய தலைமையின் பற்றாக்குறை தொடர்பாக அமெரிக்கா -சீனா இடையே பதற்றங்கள் நிலவுகிறது.

இந்நிலையில், இந்தியா தனது அனைத்து முக்கிய நட்பு நாடுகளுடனும் ஒரு காணொலி சந்திப்பை நடத்தியது இதுவே முதல் முறை.

முன்னதாக ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ, ரஷ்ய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அவரது பிரேசிலிய பிரதிநிதி எர்னஸ்டோ அராஜோ ஆகியோருடன் தொலைபேசி உரையாடலை நடத்தியிருந்தார்.

கரோனா வைரஸை திறம்பட கையாள்வதற்கான வழிகளில் பரவலாக கவனம் செலுத்தினார். இந்தியாவில் கரோனா வைரஸூக்கு 67 ஆயிரத்து 152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அகமதாபாத்தில் 6,000 பேருக்கு கரோனா பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details