இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து ட்ரோனை இயக்கியவர் உள்ளிட்ட ஆறு பேரை கைதுசெய்தனர். இந்த விவகாரத்தில் மால்கஜ்கிரி மக்களவை காங்கிரஸ் எம்.பி. ரேவந்த் ரெட்டிக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை விசாரிக்க காவல்துறையினர் மும்முரம் காட்டினர். இந்நிலையில் ரேவந்த் ரெட்டியை காவல்துறையினர் கடந்த 5ஆம் தேதி கைதுசெய்தனர். அவர் மீது பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு 14 நாள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.