மும்பை தொடர் குண்டு வெடிப்பில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருந்த ஜலீஸ் அன்சாரி(68), ராஜஸ்தானின் அஜ்மீர் சிறையிலிருந்து 21 நாள் பரோலில் வெளியேவந்தார். பரோலின்போது, தினமும் காலை 10.30 மணி முதல் 12 மணிவரை அக்ரிபாடா காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நீதிமன்றம் அவருக்கு அறிவுறுத்தியிருந்தது.
இருப்பினும், வியாழக்கிழமை (ஜனவரி 16) அவர் காவல் நிலையத்தில் ஆஜராகவில்லை. அதைத்தொடர்ந்து பிற்பகல், தன் தந்தையை காணவில்லை என்று ஜலீஸ் அன்சாரியின் மகன் ஜெய்ட் அன்சாரி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.