தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 8, 2019, 7:25 PM IST

ETV Bharat / bharat

விதிகளை மாற்றிய விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம்!

டெல்லி: சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் விதிகளை மாற்றியுள்ளது.

Airport

நாட்டின் 73ஆவது சுகந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதற்காக பாதுகாப்பும் பலபடுத்தப்பட்டுவருகிறது. இதன் ஒரு பகுதியாக உள் நாட்டில் விமானம் மூலம் பயணம் செய்பவர்கள், பயண நேரம் மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவும், வெளிநாட்டு பயணிகள் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவும் விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமாற்றம் ஆகஸ்ட் 10 முதல் 30 வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு தகுதிகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து நடக்கவிருக்கும் சுகந்திர தின விழா என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details