தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பரவல்: கடும் நெருக்கடியில் 30 கோடி மாற்றுத்திறனாளிகள்! - COVID-19 disability

ஹைதராபாத்: கரோனா வைரஸ் பரவல் தொற்று காரணமாக நாடு முடங்கியுள்ள நிலையில், 30 கோடி மாற்றுத்திறனாளிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்துகிறார் ஹைதராபாத் இந்தியப் பொது சுகாதார நிறுவனத்தின் துணைத் தலைவரும் எழுத்தாளருமான ஜி.வி.எஸ். மூர்த்தி. அது குறித்து பார்க்கலாம்.

Does our response to COVID-19 address the needs of people with disability?  நாட்டை முடக்கிய கரோனா  கடும் நெருக்கடியில் 30 கோடி மாற்றுத்திறனாளிகள்  இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள்  COVID-19 cases  COVID-19 disability  கோவிட்19 பாதிப்பு, கரோனா பாதிப்பு, கரோனா பரவல் தொற்று
Does our response to COVID-19 address the needs of people with disability? நாட்டை முடக்கிய கரோனா கடும் நெருக்கடியில் 30 கோடி மாற்றுத்திறனாளிகள் இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் COVID-19 cases COVID-19 disability கோவிட்19 பாதிப்பு, கரோனா பாதிப்பு, கரோனா பரவல் தொற்று

By

Published : Mar 30, 2020, 9:29 PM IST

ஒரு பேரழிவை நாடு எதிர்கொள்ளும்போது குறைபாடு உள்ளோரிடம் நாம் எவ்வாறு பாகுபாடு காட்டினோம் என்பதற்கு எடுத்துக்காட்டுகளுடன் வரலாறு நிரம்பிக் கிடக்கிறது. இயல்பான வாழ்க்கை வாழ முடியாத இவர்கள் கைவிடப்படுகின்றனர் அல்லது நிராகரிக்கப்படுகின்றனர்.

ஏனெனில் இவர்களிடம் வலுவான குரல் இல்லை. உடலுழைப்புக்கு அவர்களின் உடல் ஒத்துழைக்காததால் மனிதாபிமானம் மறைந்துவிடுகிறது. ஆகவே, கரோனா (கோவிட்19) நிவாரணம் அனைத்தையும் உள்ளடக்கியதாக இருத்தல் அவசியம். தடுப்பு மற்றும் தொற்று ஆகியவற்றை அணுகுவதில் மாற்றுத்திறனாளிகள் பெரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

இந்த நேரங்களில் அவர்களுக்கு ஒரு துணை அல்லது கண்காணிப்பாளர் அவசியம். எனவே அவர்களின் நெருக்கடி பன்மடங்கு அதிகரிக்கிறது. அதிலும் பார்வையற்றோர் படும் துயரங்களை வார்த்தைகளில் சொல்ல முடியாது. செவித்திறன் குறைபாடு கொண்டுள்ளவர்களால் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அறிந்துக் கொள்ள முடியாது.

மாற்றுத்திறனாளிகள் கைக் கழுவும் இடத்தை அடைய முடியாமலோ அல்லது தீவிரமாகக் கைகளை கழுவ முடியாமலோ போகும் சூழல் ஏற்படலாம். முடக்குவாதம் நோய் அறிகுறி கொண்டவர்கள் உணவு அருந்துவதில் சிக்கல் உள்ளது. தகவல்தொடர்பு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அவர்களின் பிரச்சினைகளை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று தெரியாது.

மனநல பிரச்னைகள் உள்ளவர்கள் செய்திகளைப் புரிந்து கொள்ள முடியாது. ஐரோப்பாவில் உள்ள எல்லா சேனல்களையும் போலல்லாமல் ஒரு இந்திய சேனல் கூட சைகை மொழி மொழிபெயர்ப்பாளரைப் பயன்படுத்துவதில்லை. இதன் காரணமாக, பிரதான செய்தியிடல் அவர்களை அடைவதில்லை.

கடும் நெருக்கடியில் மாற்றுத்திறனாளிகள்

அதே நேரத்தில் மாற்றுத்திறனாளிகள், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரோனா (கோவிட்19) ஆபத்து அதிகமாகும். எனவே கரோனா தொற்றுநோயை எதிர்கொள்ளும்போது மற்ற மக்களைவிட, இவர்களுக்கு அதிகப் பாதுகாப்புத் தேவை. அவர்கள் சரியான சாப்பிடாவிட்டால் மனஅழுத்தம் அதிகரிக்கக் கூடும். அப்போது அவர்களால் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியமுடியாது.

தகவல் தொடர்பு

உடல் திறன் குறைபாடுடன் உள்ள பெண்கள் பலரும் குடும்பங்களைக் கொண்டுள்ளனர். இந்த நெருக்கடியில் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை எவ்வாறு பராமரிக்க முடியும் என்பதில் அவர்கள் அனைவரும் அதிக மன அழுத்தத்தைச் சந்திக்கின்றனர். மேலும் இவர்களால் சுகாதார நிலையங்களை எளிதில் அணுக முடியாது.

கரோனா பாதிப்பு

இவர்களுக்கு வழக்கமான சுகாதாரத் தேவைகள் கூட வழங்கப்படவில்லை. நாட்டில் ஒரளவு குறைபாடு கொண்ட மக்கள் 150 மில்லியன் (15 கோடி) பேர் உள்ளனர். கடுமையான உடல் குறைபாடு 25-30 மில்லியன் (30 கோடி) மக்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஒரு பராமரிப்பாளரைச் சார்ந்தே இருக்கின்றனர்.

சிறியளவில் ஆதரவு தேவைப்படும் மக்கள் 50 மில்லியன் (50 கோடி) பேர் உள்ளனர். இவர்களுக்கும் கரோனா விழிப்புணர்வு செய்திகள் அன்றாடம் சென்றடைய வேண்டும். அதற்குத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்களின் உரிமை மீட்பு சமூகங்கள் சிறப்பு முயற்சிகள் எடுக்க வேண்டும்.

நாட்டை முடக்கிய கரோனா

இதுமட்டுமின்றி கரோனா (கோவிட்19) தடுப்பு, பொதுமக்கள் பராமரிப்பு முன்னெச்சரிக்கை செய்திகள் அவர்களையும் சென்றடையும் வண்ணம் எளிமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மொபைல் சுகாதார குழுக்கள் அமைத்து, அவர்களின் வீடுகளுக்குச் சென்று சுகாதார வசதிகளை அவர்களின் தேவைகளுக்கேற்ப முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அவர்களுக்கான மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பது, மருத்துவமனைகளுக்கு வருகை தரும்போது கரோனா வைரஸ் அறிகுறியாளர்களுடன் தொடர்பை துண்டிக்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் இயலாதவர்கள் தொடர்பு கொள்ளும் வகையில், உதவி எண்களை அறிவிக்கலாம்.

அவர்களுக்கு சோப்பு அல்லது சானிடைசர்கள் தடையின்றி கிடைக்க வழிவகைச் செய்ய வேண்டும். தற்போதைய சூழலில் அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் இயலாதவர்கள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை கவனிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மீண்டும் வலியுறுத்த வேண்டும்.

இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை - இறந்தவர்கள் உடல்களை தகனம் செய்யும் வழிமுறைகள்!

ABOUT THE AUTHOR

...view details