குருவாயூரைச் சேர்ந்தவர் ரஞ்சித். இவர் கஞ்சா வைத்திருப்பதாகக் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருச்சூர் மாவட்ட காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று அவரை கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது ரஞ்சித்துக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காவல் துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.