தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 4, 2020, 4:52 PM IST

ETV Bharat / bharat

திரிச்சூரில் பெண் மருத்துவர் கத்தியால் குத்திக் கொலை

திருவனந்தபுரம்: பெண் மருத்துவரை சக ஊழியர் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

doc
oc

கேரள மாநிலம் திரிச்சூரில் முவாட்டுபுழா பகுதியை சேர்ந்தவர் சோனா (30). பல் மருத்துவராக பணியாற்றி வந்த இவருக்கும் அவருடன் பணியாற்றும் சக ஊழியர் மகேஷ் என்பவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் கோபமடைந்த மகேஷ், அருகிலிருந்த கத்தியை எடுத்து சோனாவை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்துடன் அங்கிருந்து வெளியே ஓடிய சோனாவை, அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முயற்சித்தனர். ஆனால், அதற்குள் சோனா உயிரிழந்து விட்டார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தப்பியோடிய மகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், சோனாவும் மகேஷ் இடையே மலர்ந்த உறவின் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் பல் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளனர். முன்னதாக சோனா மகேஷ் மீது நிதி பரிவர்த்தனை தொடர்பாக புகார் அளித்திருந்தார். எனவே, இது திட்டமிட்டு அரங்கேறிய கொலை சம்பவம் என காவல் துறையினர் சந்தேகித்து மகேஷை தேடி வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details