ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜோத்பூர் எம் பி ஷெகாவத் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, சாகிராம் புனியா என்ற விவசாயி அமைச்சருக்கும், எம்பிக்கும் முன்பு மூட்டை ஒன்றினை வைத்தார். தொடர்ந்து, மூட்டையில் என்ன உள்ளது என அமைச்சர் கஜேந்திர சிங் கேட்டதையடுத்து, மூட்டையை திறக்க அவர் முற்பட்டார். ஆனால், அவரை அங்கிருந்தோர் தடுக்க முற்பட்டனர்.
இதையடுத்து அமைச்சருக்கு பதிலளித்த புனியா, மூட்டையில் விவசாயப் பகுதிகளை சேதப்படுத்தி வரும் வெட்டுக்கிளிகள் உள்ளதாகவும், வெட்டுக்கிளிகளால் தங்களது துயரங்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.