டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அகிலேஷ் பிரசாத் சிங், “மகா கூட்டணியிலிருந்து இந்துஸ்தானி அவாம் மோர்சா கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஜித்தன் ராம் மஞ்சி வெளியேறியது துரதிருஷ்டவசமானது” எனக் கூறினார்.
இது குறித்து அகிலேஷ் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் மேலும் கூறுகையில், “பிகார் மகா கூட்டணியிலிருந்து ஜித்தன் ராம் மஞ்சி வெளியேறியது துரதிருஷ்டவசமானது. நாங்கள் இந்தப் பிரச்னை தொடர்பாக அவருடன் தொடர்ந்து பேசிவருகிறோம்.
அவர் எதற்காக மகா கூட்டணியிலிருந்து பிரிந்து சென்றார் என்று எனக்கு தெரியவில்லை. மகா கூட்டணியில் ஜித்தன் ராம் மஞ்சி தொடர்வதையே காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகிறார்கள்” என்றார்.