நேற்று (செப்.05) தானியங்கி இயந்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (ஏசிஎம்ஏ) 60ஆவது வருடாந்திர அமர்வில் உரையாற்றிய அவர், "உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் நம்பகமான உற்பத்தியாளர்களுக்கு பெரும் தேவை உள்ளது.
வாகன உதிரிபாக உற்பத்தித் தொழிலானது, கரோனாவுக்குப் பிந்தைய உலகில் வெற்றிகரமாக ஒன்றாக இருக்கப் போகிறது. நெருக்கடி காலத்தில்தான் தானியங்கி இயந்திர உற்பத்தியாளர்கள் நிறுவனத்திடமிருந்து சிறப்பான ஆற்றல் வெளிவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சுயசார்பு இந்தியா அழைப்பை முழு நாடும் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த உலகளாவிய விநியோகச் சங்கிலியில் நம்பகமான உற்பத்தியாளர்களுக்கு பெரும் தேவை உள்ளது.
விரைவில் உலகளாவிய ஈடுபாட்டை விரிவுபடுத்துவோம். வணிகங்களை விரிவுபடுத்துவதற்கும், உயர்தர தயாரிப்புகளை போட்டி விலையில் வழங்குவதற்கும், நம்பகமான உற்பத்தியாளர்களுக்கான பெரும் வாய்ப்புகளைக் காண்கிறோம்.