ஊரடங்கால் தவித்த குடிபெயர்ந்த தொழிலாளர்கள் பலர், லாக்டவுன் 4.0-இல் அறிவித்த தளர்வில் தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பி சென்றனர். ஆங்காங்கே சில உயிரிழப்புகளும் நிகழ்ந்தன.
இந்நிலையில், டெல்லியில் குடியேறிய தொழிலாளர்களின் தற்போதைய நிலையை அறிய, நமது ஈடிவி பாரத் தெற்கு டெல்லியின் சத்தர்பூர் பகுதிக்கு சென்றோம். அங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
அதில் ஒரு பெண் தொழிலாளர் கூறுகையில், "எங்களுக்கு வேலை கிடைக்காததால் பெரும்பாலும் வீட்டில் தான் உள்ளோம். எங்களின் வாழ்க்கை மிகவும் சிரமப்பட்டு நிர்வகித்து வருகிறோம்" என்றார்.
இதைத்தொடர்ந்து மற்றொருவர் கூறுகையில், "வேலை இல்லாததால் பணம் இல்லாமல் தவித்து வருகிறோம். ஊரடங்கு காலத்தில் எங்களின் வீட்டு வாடகை தள்ளுபடி செய்யப்பட்டது.