தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 10, 2020, 8:15 AM IST

ETV Bharat / bharat

டெல்லி கலவரத்தில் தொடர்புடைய ஒருவர் கைது!

டெல்லி: குடியுரிமைத் திருத்தச் சட்டப் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் தொடர்புடைய ஒருவரை டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

arrest
arrest

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், சந்த்பாக் பகுதியில் ஏற்பட்ட கலவரத்துக்கு காரணமாக இருந்த காலித் சைஃபி என்பவரை டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இவர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஷாகீன் பாக் போராட்டக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், மேலும் இவர் மீது டெல்லி கலவரச் சம்பவம் தொடர்பாக முன்பு ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:மாநிலங்களவைத் தேர்தல்: மனுத்தாக்கல் செய்த முன்னாள் பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details