டெல்லி சுகாதாரத் துறை அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான சத்யேந்தா் ஜெயின் (55), கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த ஜூன் 16ஆம் தேதி ராஜீவ் காந்தி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
முதல்கட்ட பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இல்லை. ஆனால், தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்ததால் மீண்டும் இரண்டாம் முறை நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது.