இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 53 ஆயிரத்து 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் டெல்லியில் மட்டும் 5 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே நேற்று மட்டும் ஒரே நாளில் கரோனா வைரசால் 428 பேர் பாதிக்கப்பட்டது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சத்தியேந்தர் ஜெய்ன் பேசுகையில், ''கடைசி 24 மணி நேரத்தில் 428 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 5 ஆயிரத்து 532 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஆயிரத்து 542 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 82 பேர் அவசர சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 12 பேருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது.