தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குற்றங்களை நொடியில் கண்டறிய 3 லட்சக் கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்! - delhi deputy cm manish sisodia

டெல்லி: குற்றங்களை உடனுக்குடன் கண்டறிந்து தடுக்கும் நோக்கில் டெல்லி முழுவதும் புதியதாக மூன்று லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

delhi gets 3 lakh new cctv cameras

By

Published : Jun 23, 2019, 6:56 PM IST

நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் தலைநகர் டெல்லி முழுவதும் புதிதாக மூன்று லட்ச சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகளை டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா இன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஒவ்வொரு தெருவிலும் பொருத்தப்படும் இந்த கேமராக்கள் மூலம் குற்றம் நடக்கும் இடத்தின் நேரடி காட்சிகள் காவலர்களுக்கு சென்றடையும் வகையில் இது நவீனப்படுத்தப்பட்டு செயல்படவுள்ளது. தற்போதுவரை 2,000 கேமராக்கள் கிழக்கு டெல்லியில் அமைந்துள்ள பத்பர்கஞ்ச் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ளது" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details