தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிர்பயா வழக்கு: தூக்கு தேதி அறிவிப்பு! - நிர்பயா வழக்கு

டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Nirbhaya
Nirbhaya

By

Published : Jan 7, 2020, 4:57 PM IST

நான்கு குற்றவாளிகளையும் விரைந்து தூக்கிலிடக் கோரி நிர்பயாவின் தாயார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்தத் தீர்ப்பு இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து நான்கு குற்றவாளிகளும் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடப்படுவார்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

விசாரணையின்போது, அரசு தரப்பு வழக்கறிஞர், "இவ்வழக்கு குறித்த எந்த மனுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லை. குடியரசுத் தலைவருக்கு குற்றவாளிகள் அனுப்பிய கருணை மனுவும் நிலுவையில் இல்லை. மேல் முறையீடு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் விருப்பப்பட்டால் மறு சீராய்வு மனுவினை தாக்கல் செய்யலாம்" என்றார். முகேஷ், வினய் ஆகிய குற்றவாளிகள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஜேஎன்யு தாக்குதல்: மலையாள நடிகர்கள் கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details