தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தலைநகரில் இளம்பெண் ஆணவக்கொலை - இளம்பெண் ஆணவக் கொலை

டெல்லி : 25 வயதான இளம்பெண் ஆணவக் கொலைசெய்யப்பட்ட வழக்கில் ஆறு பேரை காவலர்கள் கைதுசெய்தனர்.

Delhi: 6 of a family held in 'honour killing' case  தலைநகரில் இளம்பெண் ஆணவக் கொலை  டெல்லியில் இளம்பெண் ஆணவக் கொலை  இளம்பெண் ஆணவக் கொலை  'honour killing' case
Delhi: 6 of a family held in 'honour killing' case

By

Published : Feb 22, 2020, 11:58 PM IST

கிழக்கு டெல்லி அசோக் நகரைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஷுதால் சௌத்ரி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்த அங்கித் பாத் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதல் ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி ஜனவரி மாதம் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் ஷுதால் கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் காட்டுப்பகுதியில் பிணமாகக் கிடந்தார். இது பற்றி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். விசாரணையில் ஷுதாலை அவரது குடும்ப உறுப்பினர்களே ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து ஷுதாலின் தாயார் சுமன், தந்தை ரவீந்திரா, மாமா சஞ்சய் மற்றும் பிரகாஷ், மாமா மகன் பர்வேஷ் ஆகியோரை கைதுசெய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"தவறுக்கு தண்டனை, உடல் உறுப்புகளுக்கு அல்ல" நிர்பயா வழக்கில் புதிய மனு!

ABOUT THE AUTHOR

...view details