நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஜனவரி 22ஆம் தேதி தூக்கிலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கருணை மனு நிலுவையில் இருந்த காரணத்தால் தூக்க தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தூக்கு தண்டனைகள் காலதாமதமாக நிறைவேற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, காதலருடன் சேர்ந்து தனது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பெண் ஒருவர் கொலை செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது. இவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி மறு சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.