உத்தரப் பிரதேச மாநிலம் படான் மாவட்டத்தில் உள்ள தின் நகர் ஷெய்க்பூர் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின விவசாயி நேது லால் ஜாதவ் (65). இவர் திங்கள்கிழமை (செப். 21) தனது தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்து தோட்டத்து மற்றொரு விவசாயி ரூப் கிஷோர், தனது வயலுக்கு தண்ணீரைத் தருமாறு ஜாதவிடம் கேட்டுள்ளார். ஆனால் ஜாதவ், தனது வயலுக்கு அதிகம் தண்ணீர் தேவைப்படும் எனத் தண்ணீர் தர மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரூப் கிஷோர், தனது கையிலிருந்த மண்வெட்டியால் ஜாதவின் தலையில் தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் வந்து தடுத்துள்ளனர். அப்போது கிஷோர் தப்பித்து ஒடியுள்ளார்.
இது குறித்து ஜாதவின் மகன் ஓம்பல் கூறுகையில், “நானும் தந்தையும்தான் வயலில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தோம். ஆனால் நேரம் சாய்ந்ததால், எனது தந்தை என்னை வீட்டிற்குச் சென்று உணவை தயார் செய்ய சொன்னார். ஆனால் தந்தை அதிகாலையிலும் வராததால், வயலுக்கு வந்துகொண்டிருந்தேன்.