கடந்த வெள்ளிக்கிழமை திரிபுரா சட்டப்பேரவையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள், ஏடிஎம் இயந்திரத்தை ஹேக் செய்த வழக்கின் விசாரணைக் கைதி சுசந்த கோஷின் மரணம் குறித்து முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
இதனைத்தொடர்ந்து திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேவ், அச்சம்பவம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள், முதலமைச்சர் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து நேற்று சட்டப்பேரவையில், விளக்கம் கேட்க முயன்றபோது குறுக்கிட்ட சட்டப்பேரவை உறுப்பினர் ராய் பர்மன், ”இச்சம்பவம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.