நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 604 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்து 99 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், புதிதாக 501 பேர் மரணமடைந்துள்ளனர். அதன்படி, மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.