தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் கரோனா நிலவரம்: கடந்த 24 மணி நேரத்தில் 501 பேர் மரணம்! - இந்தியாவின் கரோனா பாதிப்பு

டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் நாட்டில் 501 பேர் மரணமடைந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 122 ஆக அதிகரித்துள்ளது.

கரோனா
கரோனா

By

Published : Dec 2, 2020, 10:25 AM IST

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரத்து 604 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 94 லட்சத்து 99 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், புதிதாக 501 பேர் மரணமடைந்துள்ளனர். அதன்படி, மொத்த உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 122 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, மருத்துவமனை, தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மொத்தம் நான்கு லட்சத்து 28 ஆயிரத்து 644 பேர் மருத்துவம் பெற்றுவருகின்றனர். இதுவரை 89 லட்சத்து 32 ஆயிரத்து 647 பேர் குணமடைந்துள்ளனர்.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43 ஆயிரத்து 62 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

ABOUT THE AUTHOR

...view details