கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் குணப்படுத்துவதற்காக முன்னின்று பணியாற்றிவருபவர்களில் மிக முக்கியப் பங்காற்றுபவர்கள் செவிலியர். ஆனால், இவர்களுக்கு எதிராகவும் சில மோசமான சம்பவங்கள் நிகழ்த்தப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவம்தான் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் நிகழ்ந்துள்ளது.
சிக்கல்தானா பகுதியில் வசிப்பவர் ஷில்பா ஹிவாலே. இவர் மாவட்ட மருத்துவமனையில் பணிபுரிகிறார். இந்நிலையில், மே 11ஆம் தேதி இரவு 1 மணியளவில் சிலர் தண்ணீர் கேட்கும் சாக்கில் ஷில்பாவின் வீட்டிற்கு வந்தனர். அவர் சமையலறையின் ஜன்னலைத் திறந்துபார்த்தபோது, வெளியில் இருந்தவர்கள் ஷில்பாவை மோசமான வார்த்தைகளால் திட்டத் தொடங்கினர்.
இதற்கிடையில், ஷில்பாவை தாக்கி அச்சுறுத்தினர். மேலும், “உன்னால் (ஷில்பா) குடியிருப்பின் முழுப் பகுதியும் நோய்த்தொற்று ஏற்படக்கூடும்” என்று கூறினார். ஆகவே, “இங்கிருந்து செல்லாவிட்டால் மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்” என்றும் மிரட்டல்விடுத்தனர். இது தொடர்பாக ஷில்பா, சிட்கோ எம்ஐடிசி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், “என்னைச் சிலர் குச்சிகளால் தாக்கினார்கள்” என்றும் தெரிவித்திருந்தார். அவுரங்கபாத்தில் கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. மற்ற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் உள்ளே நுழையக்கூடாது என்பதற்கான பல பகுதிகள் உள்ளூர்வாசிகளால் சீல்வைக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் செல்பவர்களும் நோய்ப்பரவாமல் இருப்பதற்காகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.