சீனாவின் வூகான் மகாணத்தில் அறியப்பட்ட புதிரான கரோனா வைரஸூக்கு இதுவரை உலகெங்கிலும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவை பொறுத்தமட்டில் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த மக்கள் ஊரடங்கு வருகிற 31ஆம் தேதி வரை பகுதி நேரமாக கடைப்பிடிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் நாடு முழுக்க 75 மாவட்டங்களை முழுவதுமாக முடக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.