தமிழ்நாடு

tamil nadu

நாட்டில் ஒரேநாளில் 18,552 பேருக்கு கரோனா!

ஹைதராபாத்: நாட்டில் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.

By

Published : Jun 27, 2020, 11:19 AM IST

Published : Jun 27, 2020, 11:19 AM IST

coronavirus in Telangana
coronavirus in Telangana

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன.

அதன்படி நேற்று ஒரேநாளில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 552ஐ கடந்துள்ளது. மேலும் தெலங்கானா மாநிலத்தில் 985 பேருக்கு நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 12 ஆயிரத்து 349 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நான்காயிரத்து 374 பேரை சோதித்ததில் 985 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: கடத்தப்பட்ட 8 வயது சிறுமி எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details