தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா பாதிப்பைச் சீர் செய்ய 20 ஆயிரம் கோடி ரூபாய்! - கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: கரோனா பாதிப்பைச் சீர் செய்யும் விதமாக கேரள அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கியுள்ளது.

By

Published : Mar 20, 2020, 4:07 PM IST

Vijayan
Vijayan

இந்தியாவில் கரோனா வைரஸின் பாதிப்பு தீவிரமாகப் பரவிவரும் நிலையில், நாட்டிலேயே முதலில் பாதிப்பு ஏற்பட்ட கேரளாவில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், பொதுப் போக்குவரத்து ஆகியவற்றுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கரோனா பாதிப்பில் முடங்கியுள்ள மாநிலத்தைச் சீராக்கும் விதமாக அரசு 20 ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் ஊரக வேலைவாய்ப்பு பெரிதும் முடங்கியுள்ளதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க குடும்பஸ்ரீ திட்டம் மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓய்வூதியம் வாங்கி நபர்களுக்கு இரு மாத ஓய்வூதியம் முன்கூட்டியே வழங்கப்படும் எனவும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தினருக்கு ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், மலிவு விலை உணவு வழங்க தனியாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கரோனா வைரஸால் கேரளாவில் இதுவரை 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:கரோனா அச்சுறுத்தல்: உதவி எண் அறிவித்த மத்திய அரசு!

ABOUT THE AUTHOR

...view details