உலகை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு, இந்தியாவில் இதுவரை மூன்று ஆயிரத்து 374 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 266 பேர் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாட்டிலேயே மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் அதிகம் பேர் கரோனா வைரஸ் தொற்று பாதித்த மாநிலத்தில் தமிழ்நாடு உள்ளது.
கோவிட்-19 பாதிப்பு - மகாராஷ்டிராவை நெருங்கும் தமிழ்நாடு!
ஹைதராபாத்: இந்தியாவில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலிருக்கும் நிலையில் தமிழ்நாடு இரண்டாம் இடம் வகிக்கிறது.
COVID-19 COVID-19 India tracker active COVID-19 cases Ministry of Health and Family Welfare கோவிட்19 பாதிப்பு, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கரோனா வைரஸ் பெருந்தொற்று
மகாராஷ்டிராவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 485 ஆக உள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. உலகம் முழுக்க கரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு, 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு தற்போது 60 ஆயிரத்தை கடந்துவிட்டது.
இதையும் படிங்க: கரோனா சிகிச்சை: தயார் நிலையில் ராணுவ மருத்துவமனைகள்