கர்நாடகாவில் ஐம்பது வயதான காவலர் ஒருவர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்து, கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு நம்பிக்கை கூறும் விதமாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "கரோனா தொற்று பாதிக்கப்பட்ட காவலர் உள்பட எந்த ஒரு அரசு அலுவலரும் மனம் உடைய வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் அரசு உங்களை கைவிடாது.
மாநிலத்தில் கூடுதல் கரோனா பரிசோதனை செய்ய சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா இறப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் ஆறு ஆயிரத்து 283 ஆகவும், டெல்லியில் இரண்டு ஆயிரத்து 233 ஆகவும், குஜராத்தில் ஆயிரத்து 684 ஆகவும், தமிழ்நாட்டில் 794 ஆகவும் உள்ளது.