பாஜக மூத்தத் தலைவர்களில் ஒருவர் சின்மயானந்தா. அவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக உத்திர பிரசாத்தைச் சேர்ந்த 23 வயது சட்டக் கல்லூரி மாணவி புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் சின்மயானந்தா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கைச் சிறப்புப் புலனாய்வுக் குழு நீதிமன்ற கண்காணிப்பில் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவி, தன்னிடமிருந்து ரூ. 5 கோடி பறிக்க முயன்றதாக சின்மயானந்தா அளித்த புகாரைத் தொடர்ந்து, சட்டக்கல்லூரி மாணவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.