தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கு - முன்னாள் மத்திய அமைச்சருக்கு சிறை! - முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்

டெல்லி: ஜார்கண்ட் நிலக்கரி ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் திலீப் ராய்க்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ex-union-minister-convicted-in-coal-scam
ex-union-minister-convicted-in-coal-scam

By

Published : Oct 26, 2020, 11:32 AM IST

1999ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக திலீப் ராய் இருந்தார். அவர் பதவி வகித்த காலத்தில், ஜார்கண்ட் மாநிலத்தில் சிடிஎல் என்ற நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டது. அதில் திலீப் ராய் முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை டெல்லி மாவட்ட நீதிமன்றம் விசாரித்து வந்தது.

அதைத்தொடர்ந்து அக்.6ஆம் தேதி டெல்லி மாவட்ட நீதிமன்றம், "திலீப் ராய் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், அவரை குற்றவாளி என தீர்ப்பளித்தது. அதையடுத்து அவருக்கான தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படாமல் இருந்தவந்த நிலையில், தற்போது அவருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறிப்பாக அவருக்கு ஐபிசி 409ன் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த வழக்கில் தொடர்புடைய நிலக்கரி சுரங்க உயர் அலுவலர்கள் பிரதீப் குமார் பானர்ஜி, நித்ய நந்த் கௌதம் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓபிசி மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

ABOUT THE AUTHOR

...view details