தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : பிரசாந்த் பூஷணின் தண்டனை விவரம் இன்று அறிவிப்பு! - வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்

டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணின் தண்டனை விவரத்தை உச்ச நீதிமன்றம் இன்று(ஆக.31) அறிவிக்கிறது.

Prashant Bhushan
Prashant Bhushan

By

Published : Aug 31, 2020, 9:47 AM IST

Updated : Aug 31, 2020, 11:51 AM IST

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே பைக்கில் அமர்ந்தவாறு புகைப்படம் ஒன்றை எடுத்திருந்தார். அந்தப் படம் குறித்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் தனது ட்விட்டரில், 'முகக் கவசம், ஹெல்மெட் அணியாமல் அமர்ந்த தலைமை நீதிபதி' என விமர்சித்து பதிவிட்டார். அது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

அதனால் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சிலர், பிரசாந்த் பூஷண் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தனர். இவ்வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரசாந்த் பூஷணை குற்றவாளி என அறிவித்து, அவர் மன்னிப்புக்கேட்க கால அவகாசம் அளித்தது.

ஆனால், அவர் 'மன்னிப்புக் கோரமுடியாது' என மறுப்புத் தெரிவித்தார். அதனால் உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூஷணின் தண்டனை விவரத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வழங்க இருப்பதாகக்கூறி, வழக்கை ஒத்தி வைத்தது. அதன்படி இன்று (ஆக.31) அவருக்குத் தண்டனை விவரம் வழங்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:பிரசாந்த் பூஷணுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதிய சட்ட மாணவர்கள்

Last Updated : Aug 31, 2020, 11:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details