தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 19, 2020, 10:52 PM IST

ETV Bharat / bharat

சட்டவிரோதமாக இயங்கிய சாராயக்கடை அகற்றம்: காவல் துறை நடவடிக்கை

புதுச்சேரி: சட்டவிரோதமாக இயங்கிவந்த சாராயக்கடையை காவல் துறையினர் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.

காவல் துறை நடவடிக்கை
காவல் துறை நடவடிக்கை

புதுச்சேரி பாகூர் சின்ன கரையாம்புத்தூர் கிராமப் பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து அந்தக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வயல்வெளியில் கூரைகொட்டகையின் கீழ் விற்பனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

கலால் துணை ஆணையர் சஷ்வத் சவுரப் தலைமையில், சாராயக்கடையை பாதுகாப்புடன் அகற்றி காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புதுச்சேரியில் கலால் துறை அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலால் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அடையாளம் தெரியாத கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இதையும் படிங்க:வெல்ல ஆலைகளில் எம்.பி., திடீர் ஆய்வு: வெளிவந்த அதிர்ச்சிகரமான தகவல்கள்!

ABOUT THE AUTHOR

...view details