இந்தியாவில் 31 பேருக்கு கொரோனோ நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேற்கொண்டு அதிகரிக்காமலிருக்க தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “மாநில அரசுகளுக்கு இது இக்கட்டான சமயம். பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, சத்தீஸ்கர் உள்ளிட்ட காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் இதுபோன்ற ஆபத்து காலங்களை உணர்ந்து செயல்பட வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற அச்சுறுத்தல்களைச் சரியான முறையில் எதிர்கொள்ள வேண்டும்.