தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'ஜேஎன்யு-வில் சிசிடிவி கேமரா பொருத்த மாணவ அமைப்புகளின் ஒத்துழைப்புத் தேவை' - JNU பல்கலை.யில் சிசிடிவி காமிரா பொருத்த எதிர்ப்பு

டெல்லி: ஜேஎன்யு பல்கலைகழத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாணவ அமைப்புகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனப் பல்கலைக்கழகம் வேண்டுகோள்விடுத்துள்ளது.

Coronavirus: JNU admin seeks cooperation of all for installing CCTVs on campus
Coronavirus: JNU admin seeks cooperation of all for installing CCTVs on campus

By

Published : Mar 19, 2020, 2:34 PM IST

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் கோரிக்கைவிடுத்திருந்தது. இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைவோரை கண்காணிக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உதவும் எனத் தெரிவித்திருந்தது.

பல்கலைக்கழகத்தின் இந்தக் கோரிக்கைக்கு மாணவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பல்கலைக்கழகம், விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தங்களின் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதிக்கும் என மாணாக்கர் தெரிவித்தனர்.

பல்கலைக்கழகத்தில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் உதவும் எனப் பல்கலைக்கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்ததது.

முன்னதாக, கடந்த ஜனவரி 5ஆம் தேதி மாணாக்கர், பேராசிரியர்கள் மீது பல்கலைக்கழக வளாகத்திலேயே தாக்குதல் நடத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: ஜே.என்.யூ. வன்முறை: 49 பேருக்கு டெல்லி காவல் துறை நோட்டீஸ்

ABOUT THE AUTHOR

...view details