கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று பல்கலைக்கழகம் கோரிக்கைவிடுத்திருந்தது. இதன்மூலம் பல்கலைக்கழகத்தில் அனுமதியின்றி நுழைவோரை கண்காணிக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உதவும் எனத் தெரிவித்திருந்தது.
பல்கலைக்கழகத்தின் இந்தக் கோரிக்கைக்கு மாணவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். பல்கலைக்கழகம், விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது தங்களின் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பாதிக்கும் என மாணாக்கர் தெரிவித்தனர்.