இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த மூவர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்ததாக முதற்கட்ட மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது. இதையடுத்து, அரசு மருத்துவமனையின் தனி அறையில் வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. பாதிப்படைந்த முதல் மாணவியின் மருத்துவ அறிக்கையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்று இல்லை என தெரியவந்ததைத் தொடர்ந்து, மற்ற இரு மாணவிகள் முன்னதாகவே விடுவிக்கப்பட்டனர். இது குறித்து கேரள சுகாதார அமைச்சர் சைலஜா கூறுகையில், "திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவியின் உடல்நிலை தேறியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியின் ரத்த மாதிரி புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைரலாஜிக்கு அனுப்பப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது" என்றார்.