தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சசிகலாவுக்கு மீண்டும் கரோனா பரிசோதனை - விக்டோரியா மருத்துவமனை

பெங்களூரு: வி.கே. சசிகலாவுக்கு இன்று (ஜன.30) மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Sasikala
சசிகலா

By

Published : Jan 30, 2021, 1:58 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சரின் உதவியாளர் வி.கே. சசிகலா, ஜனவரி 27ஆம் தேதியன்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கரோனா தொற்று காரணமாக 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவரின் மாதிரிகளை இன்று (ஜன.30) மருத்துவர்கள்மறுபடியும் பரிசோதனை செய்யவுள்ளனர். ஒருவேளை சோதனை முடிவில் கரோனா தொற்று இல்லை என்றால் அவர் வீட்டிற்கு அனுப்பப்படுவார். இல்லையெனில் விக்டோரியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெறுவார்.

இதற்கு முன்பு இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று (ஜன.29) குணமடைந்துள்ளார். தற்போது அவரது சுவாசம் சாதாரண நிலையில் உள்ளன. இந்நிலையில், இன்று (ஜன.30) பிற்பகல் நடத்தப்படும் சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருக்காது என வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அதிமுக துணை செயலாளர்!

ABOUT THE AUTHOR

...view details