இந்தியாவில் கரோனாவால் மருத்துவர்கள் உயிரிழக்கும் சம்வங்களும் அதிகரித்துவருகின்றன. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் மருத்துவர் ஒருவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு தீர்தங்கர் மஹாவீர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாள்களாக அவரது உடல்நலம் மோசமடைந்த நிலையில் அவர் வென்ட்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை மையத்துக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார். இதனை மொராதாபாத் தலைமை மருத்துவர் எம்.சி. கார்க் உறுதிப்படுத்தினார்.