கேரள மாநிலம், திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் நவுசத்(40). காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் நேற்று இரவு அந்தப் பகுதியில் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு முகமூடி அணிந்தப்படி இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், அவரை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து நவுசத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினருக்கு தொடர்பு - எஸ்டிபிஐ கட்சி
திருவனந்தபுரம் : காங்கிரஸ் கட்சி பிரமகர் கொலை வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளனர்.

காங்கிரஸ் பிரமுகர் கொலைச் செய்யப்பட்ட இடம்
காங்கிரஸ் பிரமுகர் கொலைச் செய்யப்பட்ட இடம்
தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் நவுசத் கொலை வழக்கில் எஸ்டிபிஐ கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.