தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்- பிரியங்கா காந்தி - காங்கிரஸ்

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது வேளாண் சட்டங்கள் நீக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

Congress will scrap farm laws if it comes to power Priyanka Gandhi Vadra Priyanka Gandhi Kisan Panchayat Kisan Panchayat Saharanpur Uttar Pradesh news Farmers stir Farmers protest பிரியங்கா காந்தி காங்கிரஸ் சட்டப்பேரவை
Congress will scrap farm laws if it comes to power Priyanka Gandhi Vadra Priyanka Gandhi Kisan Panchayat Kisan Panchayat Saharanpur Uttar Pradesh news Farmers stir Farmers protest பிரியங்கா காந்தி காங்கிரஸ் சட்டப்பேரவை

By

Published : Feb 10, 2021, 8:09 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடந்த பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவினர் டெல்லியில் விவசாய சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராடும் விவசாயிகளை அவமதிக்கின்றனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த மூன்றுச் சட்டங்களும் அதிகாரப் பேய்கள். நீங்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு அதிகாரம் அளித்தால், இந்தச் சட்டங்கள் நீக்கப்படும். இந்தச் சட்டங்கள் நீக்கப்படும் வரை காங்கிரஸ் தொடர்ந்து போராடும்” என்றார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வேளாண் சட்டங்கள் நீக்கப்படும்- பிரியங்கா காந்தி

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வெற்றிபெறும் முனைப்பில் காங்கிரஸ் தற்போதே பரப்புரையை நடத்திவருகிறது.

இதையும் படிங்க: கார் கண்ணாடியை துடைத்த பிரியங்கா காந்தி!

ABOUT THE AUTHOR

...view details