குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாகப் போராடிவருகின்றன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றவர்களின் குடும்பங்களை காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்தித்துவருகிறார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் வழக்குரைஞர்கள் சங்க கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்தச் சட்ட (சி.ஏ.ஏ.) எதிர்ப்புப் போராளிகளுக்கு சட்ட உதவி வழங்குவது குறித்து கருத்து கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.