தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 18, 2020, 8:04 AM IST

ETV Bharat / bharat

டெல்லியில் கோவிட்-19 பாதிப்பு ஐந்து மடங்கு அதிகம்- அஜய் மக்கான்

டெல்லியில் கரோனா பெருந்தொற்று பரவல் மிகவும் மோசமாக உள்ளது எனக் கூறிய அஜய் மக்கான், வைரஸ் பரவலை தடுப்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கம் தோல்வி அடைந்துவிட்டது என்றும் கூறினார்.

Congress slams Delhi govt spokesperson Ajay Maken Ajay Maken handling of COVID-19 situation COVID-19 situation Arvind Kejriwal-led Delhi governmen பொதுமுடக்கம் அஜய் மக்கான் காங்கிரஸ் கோவிட்-19 அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி
Congress slams Delhi govt spokesperson Ajay Maken Ajay Maken handling of COVID-19 situation COVID-19 situation Arvind Kejriwal-led Delhi governmen பொதுமுடக்கம் அஜய் மக்கான் காங்கிரஸ் கோவிட்-19 அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி

டெல்லி: காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளருமான அஜய் மக்கான் காணொலி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “டெல்லியில் கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ளது. எனவே மீண்டும் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தால் ஆதரிப்பதாக கூறினார்.

மேலும் தளர்வுகளுடன் கூடிய பகுதி நேர முடக்கம் மோசமான விளைவு என்று கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “தேசிய அளவில் கோவிட்-19 பெருந்தோற்று பாதிப்பை விட டெல்லியில் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது.

அந்த வகையில் மாநிலத்தில் ஐந்தில் ஒருவர் கோவிட்-19 பெருந்தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாளொன்றுக்கு பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கிவருகிறோம்.

இதில் 20 விழுக்காடு பாதிப்பாளர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வேண்டும். அதாவது ஒவ்வொரு நாளும் கூடுதலாக அவசர சிகிச்சை வசதி கொண்ட 600 படுக்கைகள் தேவைப்படும்” என்றார்.

பொதுமுடக்கம் குறித்து அவர் கூறுகையில், “எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், அனைத்து சந்தைகளும், அலுவலகங்களும் உடனடியாக மூடப்பட வேண்டும். இது தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிநேர முறையில் செய்யப்படக்கூடாது, ஏனென்றால் கரோனா வேகமாக பரவுகிறது. இது பற்றி டெல்லி அரசும், மத்திய அரசும் சிந்திக்க வேண்டும்.

இது மட்டுமின்றி அரசு அலுவலகங்கள் மற்றும் பொது போக்குவரத்தை நிறுத்த வேண்டும்” என்றார்.

மேலும், “கோவிட்-19 பெருந்தொற்று விவகாரத்தில் மத்திய அரசும், டெல்லி அரசும் விளையாடுகின்றன” என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, “டெல்லியில் கோவிட்-19 பெருந்தொற்றை, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கத்துக்கு கையாள தெரியவில்லை” என்றும் அஜய் மக்கான் கூறினார்.

இதையும் படிங்க: சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆலோசனைக் குழு கூட்டம்

ABOUT THE AUTHOR

...view details