இந்திய நாட்டின் பொருளாதார தடைகளை உடைத்த பாஜக அரசை கண்டித்தும் பிரதமர் மோடியை கண்டித்தும் புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் கடந்த 5ஆம் தேதி முதல் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்று மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.