புதுச்சேரி ராஜ்பவன் சட்டப்பேரவை தொகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மனைப்பட்டா வழங்க தடையாக இருக்கும் தலைமை செயலர் அஸ்வின்குமாரை கண்டித்து மீனவர்கள் உள்ளிட்ட ஊர்மக்கள் ராஜ்பவன் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டிருந்தனர்.
இது தொடர்பாக காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமி நாராயணன் ஏற்கனவே சட்டப்பேரவை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் இதனைத் தெரிவித்திருந்தார்.
அதன்படி புதுச்சேரி ராஜ்பவன் சட்டப்பேரவை தொகுதியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் லட்சுமி நாராயணன் தலைமையில் தலைமை செயலருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி எஸ்.வி. பட்டேல் சாலை வழியாக தலைமை செயலகத்தை நோக்கி முற்றுகையிட புறப்பட்டனர்.