இதுகுறித்து பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில், "மேற்கு வங்கத்தை ஆம்பன் புயல் தாக்கிச் சென்றபிறகு அங்கு நடைபெறும் நிவாரண, மீட்புப் பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. பாதிக்கப்பட்டப்பகுதிகளில் மக்களுக்கு வழங்கப்படும் உணவு, நிவாரணப் பொருட்களில் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
தலைநகர் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலத்தின் பெரும்பாலானப் பகுதிகள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். குடிநீருக்கும் கடும் தட்டுபாடு நிலவி வருகிறது.
பல இடங்களுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. சாலைகள் மாயமாகியுள்ளன. அழுகிய நிலையில் விலங்குகளின் சடலங்கள் தண்ணீரில் மிதக்கின்றன.