தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாயிகளின் நலனை பாதுகாக்க சந்தைக் குழு சட்டத்தை காங்கிரஸ் இயற்றியது - திக்விஜய் சிங் - விவசாய உற்பத்தி சந்தைக் குழு சட்டம்

போபால்: விவசாயிகளின் நலனை பாதுகாக்க விவசாய உற்பத்தி சந்தை குழு சட்டத்தை காங்கிரஸ் கமிட்டி தலைமையிலான அன்றைய மத்திய அரசு உருவாக்கியதாக அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

விவசாயிகளின் நலனை பாதுகாக்க சந்தைக் குழு சட்டத்தை காங்கிரஸ் இயற்றியது!
விவசாயிகளின் நலனை பாதுகாக்க சந்தைக் குழு சட்டத்தை காங்கிரஸ் இயற்றியது!

By

Published : Sep 19, 2020, 4:43 AM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவையில் மழைக்கால கூட்டத்தொடர் திட்டமிட்டபடி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கியது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மக்களவையில் 8 சட்ட முன்வடிவுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

குறிப்பாக, அத்தியாவசிய பொருள்கள் (திருத்த) மசோதா 2020, உழவர் உற்பத்தி வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) மசோதா 2020, விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு அளித்தல்) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா 2020 ஆகிய மூன்று சட்ட முன்முடிவுகளை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார்.

இந்த மூன்று சட்ட முன்வடிவுகளை காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உழவர்களுக்கு எதிரான சதி என குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடு முழுவதும் மத்திய அரசின் இந்த சட்ட முன்வடிவுகளை கண்டித்து போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், " கடந்த 2004ஆம் ஆண்டில் மாதிரி ஏபிஎம்சி சட்டத்தை வகுத்த அன்றைய காங்கிரஸ் தலைமையிலான யு.பி.ஏ. அரசு விதிகளை சீர்ப்படுத்தி 2013ஆம் ஆண்டில் இதற்கென ஒரு குழுவை அமைத்தது.

வேளாண் உற்பத்தி இடை-அரசு வர்த்தகம் மற்றும் வர்த்தக மேம்பாடு ஒழுங்குமுறை மசோதாவை தடை இல்லாத சந்தைகளுக்கு பரிந்துரைத்தது.

மேலும், சட்ட அமைச்சகம் ஒரு வரைவு மசோதாவை தயாரித்தது. இருப்பினும் அது தொடரப்படவில்லை. விவசாயிகளின் நலனை பாதுகாக்க விவசாய உற்பத்தி சந்தைக் குழு சட்டத்தை காங்கிரஸ் கமிட்டி தலைமையிலான அன்றைய மத்திய அரசு உருவாக்கியது.

தற்போதைய மத்திய அரசு விவசாயிகளை சுரண்டுவதற்காக மூன்று சட்ட முன்வடிவுகளை வடிவமைத்து, அதனை சட்டமாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

எந்தவொரு பெரும் நிறுவனமும் ஒரு மண்டியைத் திறக்க முடியும். இந்த புதிய உழவர் எதிர்ப்பு மசோதாக்களின் கீழ், மண்டியில் உள்ள எந்தவொரு சர்ச்சையும் அலுவலர்களால் கையாளப்படும். என சொல்கிறார்கள். இந்த உழவர் விரோத சட்ட முன்வடிவுகள் அனைத்தும் முழுமையாய் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இதனை நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். அவர்களோடு காங்கிரஸ் துணை நிற்கிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details