பிரதமர் நிவாரண நிதி தொடர்பாக அவதூறு பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷேர்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் நிவராண நிதி விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை பாஜகவின் சர்வாதிகார மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. வெளிப்படைத்தன்மை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு எதிராக பாஜக ஜனநாயக விரோத நடவடிக்கையில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது என காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னதாக, ட்விட்டர் பக்கத்தின் மூலம் தவறான தகவலைப் பரப்பியதாகக் கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.