இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.எல். புனியா, “ ஒரு கிலோ வெங்காயம் ரூ .120 க்கு விற்கப்படுகிறது. இது கற்பனை செய்யமுடியாத விலை உயர்வு. இந்த விலையேற்றம் குறித்து அரசாங்கம் முற்றிலும் அறியாததாக தெரிகிறது. அவர்கள் (பாஜக தலைவர்கள்) கார்ப்பரேட்டை (பெரு நிறுவனங்கள்) கடமைப்படுத்த உறுதிப் பூண்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் அளித்து வருகின்றனர். இருப்பினும் சந்தையில் தீவிர பணவீக்கம் குறித்தும், சாமானிய மக்களுக்கு நிலைமை எவ்வளவு கடினமான சூழல் குறித்தும் அவர்களுக்கு கவலையில்லை.” என்றார்.
வெங்காய விலையேற்றம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் தாக்கு - வெங்காய விலையேற்றம்
டெல்லி: சில்லறை சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், மத்திய அரசாங்கம் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தாமல் ஆட்சியின் மீதான பிடியை முற்றிலுமாக இழந்துவிட்டதாகக் காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார நெருக்கடி குறித்து அவர் கூறும்போது, “ஒரு மோசமான பொருளாதார மந்தநிலையை நாடு அடைந்து கொண்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் இன்னும் ஏற்கவில்லை. நடுத்தர மற்றும் கீழ் வர்க்க குடிமக்களை தொந்தரவு செய்யும் இத்தகைய பிரச்னைகள் குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி குறைந்தப்பட்ச விலையில் தேசிய மூலதனத்தில் வெங்காயம் வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். டெல்லிக்கு குறைந்தப்பட்ச விலை வெங்காய விநியோகத்தை மீண்டும் தொடங்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாகவும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார் என்பது நினைவுக் கூறத்தக்கது.
இதையும் படிங்க: வெங்காய விலையைக் கட்டுப்படுத்த அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவு!