இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "2022ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும் என்று பாஜக வாக்குறுதியளித்துள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.
விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயர வேண்டுமெனில் அத்துறையின் ஆண்டு வருமானம் குறைந்தபட்சம் 12 சதவீதமாவது அதிகரிக்க வேண்டும். ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் விவசாயத் துறை வெறும் 2.9 சதவீத வளர்ச்சியே கண்டுள்ளது.
இது மத்திய அரசின் 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார திட்டத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.