உத்தரப் பிரதேசத்தின் அயோத்தி நகரிலிருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் படான் நகரம் அமைந்துள்ளது. இங்கு கோவிலும், மசூதியும் ஒரே இடத்தில் அமைந்துள்ளன.
அவற்றின் ஜெபத்தை (மந்திரம்- பாங்கு) ஒரே நேரத்தில் கூட கேட்கலாம். இரு சமூக மக்களும் எந்தவொரு ஆட்சேபனையும் இல்லாமல் இந்த பாரம்பரியத்தை பின்பற்றி வருகின்றனர்.
இந்நகரில் மக்கள் மதநல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாய் விளங்குவதோடு, பரஸ்பர சுக வாழ்வையும் தொடர்கின்றனர். இன்று அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அயோத்தியில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கு முற்றிலும் எதிராக படானில் நிலவரம் உள்ளது. இங்குள்ள சமூகம் ஒருவருக்கொருவர் தங்கள் மசூதி மற்றும் கோயிலில் ஒற்றுமையைக் கொண்டுள்ளனர்.
நகரின் மையத்தில் ஒரு அனுமன் கோயிலும், ஹஸ்ரத் மீரா ஜி சஹாப் மசூதியும் ஒரே சுவரைப் பகிர்ந்துகொண்டு ஒற்றுமையுடன் பிரார்த்தனை செய்கின்றன. மந்திரங்கள் மற்றும் அஸான்களின் (பாங்கு) ஒலியைக் கூட ஒரே நேரத்தில் கேட்க முடியுகின்றது.
இப்பகுதியில் வாழும் மக்கள் எப்போதும் மற்ற மதங்களின் மீதுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் மத நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் இரு ஆலயங்களிலும் வணக்கம் செலுத்துகிறார்கள்.